ஒருநாள் கிரிக்கெட்: அதிக முறை 400 ரன்கள் - இந்தியாவின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்கா...!

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

Update: 2023-09-16 03:15 GMT

Image Courtesy: @ICC

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.

ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து 417 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 164 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 400 ரன்கள் குவித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெடில் அதிக முறை 400 ரன்கள் குவித்த அணி என்ற இந்தியாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்கா.

தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்டத்தில் அடித்த 400 ரன்னையும் சேர்த்து 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி 6 முறை 400 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்