2024 ஐபிஎல் தொடரில் களம் இறங்கும் ரிஷப் பண்ட்..? - கங்குலி அளித்த தகவல்

கொல்கத்தாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் ரிஷப் பண்ட் கலந்து கொண்டார்.

Update: 2023-11-10 03:01 GMT

கொல்கத்தா,

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.

காயம் காரணமாக 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் ரிஷப் பண்ட் கலந்து கொண்டார். இந்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் நல்ல நிலையில் உள்ளார். அடுத்த சீசனில் இருந்து அவர் விளையாடுவார். அவர் இப்போது பயிற்சி செய்ய மாட்டார். அவர் இங்கு, வரும் 11ம் தேதி வரை இருப்பார். வரவிருக்கும் ஏலங்களைக் கருத்தில் கொண்டு, பண்ட் அணியின் கேப்டனாக இருப்பதால், அணியைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்