மாநில அளவிலான கால்பந்து போட்டி; புதுச்சேரி அணி முதலிடம்

விழுப்புரத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-05 01:15 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் ரெயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி , திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மொத்தம் 24 அணியினர் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில் புதுச்சேரி குப்புராஜ் கால்பந்தாட்ட கழக அணி முதல் இடத்தையும், விழுப்புரம் கால்பந்தாட்ட கழக ஏ அணி 2-ம் இடத்தையும், ஈரோடு ஸ்பார்ட்டன்ஸ் கால்பந்தாட்ட கழக அணி 3-ம் இடத்தையும், விழுப்புரம் கால்பந்தாட்ட கழக பி அணி 4-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இயன்றதை செய்வோம் குழுவின் நிறுவனர் நத்தர்ஷா, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க தலைவர் பழனிவேல் ஆகியோர் பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்