இந்தியா-இங்கிலாந்து ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
3-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் புவனேஸ்வரில் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து ஆக்கி அணி வீராங்கனைகளில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.