தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் பொன்முடி ஆகியோரிடம் இருந்த இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.