பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ஜீப் - 8 பேர் பலி
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்டம் தலா பகுதியில் இருந்து பக்டோ கிராமத்திற்கு இன்று மாலை ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 13 பேர் பயணித்தனர்.
மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.