அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-02-03 12:25 IST

சிம்லா,

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமெங் பகுதியில் இன்று காலை 11.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்