மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவு

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-04-03 14:57 IST

மும்பை

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவானதாக தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.21 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்