ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, நீதிபதி தர்லோக் சிங் சவுகான் பொறுப்பேற்றார்
2014-ம் ஆண்டில் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.;
ராஞ்சி,
ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக, நீதிபதி தர்லோக் சிங் சவுகான் இன்று பொறுப்பேற்று கொண்டார். கவர்னர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இமாசல பிரதேச ஐகோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த அவரை, ஜார்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக்குவதற்கு, கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதன்படி, அவர் நீதிபதியாக பதவி ஏற்று கொண்டுள்ளார்.
அவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் சண்டிகாரில் சட்ட படிப்புகளை படித்து முடித்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியானார்.