சபரிமலை சீசனையொட்டி பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்
சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் நாளை முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
சபரிமலையில் சீசனையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் சீசன் தொடங்குகிறது. இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சீசனை முன்னிட்டு பூஜை, வழிபாடுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. அதேபோல் சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் நாளை முதல் தொடங்கும். முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.onlinetdb.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.