பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பூசாரி கோவில் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரை தொடர்ந்து பூசாரியிடம் விசாரிக்க போலீசார் அவரை தேடியுள்ளனர்.;

Update:2025-09-20 19:00 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் கண்டிவாலி பகுதியில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 52 வயது நபர் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கோவில் பூசாரி 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்னை தனிமையில் சந்திக்கும்படி இளம்பெண்ணுக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பூசாரி மீது கண்டிவாலி போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரை தொடர்ந்து பூசாரியிடம் விசாரிக்க அவரை தேடியுள்ளனர். அப்போது, பூசாரி பூஜை செய்யும் கோவிலுக்கு சென்று போலீசார் தேடியுள்ளனர். அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள பேனில் பூசாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், பூசாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பூசாரி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்