6 வயது மகனுடன் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை - கடிதம் சிக்கியது

புனேவில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தனது 6 வயது மகனுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-06-19 21:41 IST

கோப்புப்படம் 

புனே,

மராட்டிய மாநிலம், புனே அம்பேகாவ் புத்ருக் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் வசித்து வந்தவர் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31 வயது). மயூரிக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மயூரி தனது 6 வயது மகனுடன் 6-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

இதில் தரையில் விழுந்த மயூரியும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார், உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அவரது அறையில் சோதனை நடத்தினர். அப்போது மயூரி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தனது விபரீத முடிவுக்கு மைத்துனியின் கொடுமையே காரணம் என எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்