பாகிஸ்தானுடன் ராணுவ மோதல்: நாடாளுமன்ற குழுவிடம் 19-ம் தேதி விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி
இந்தியா - பாக்., இடையே ஏற்பட்ட மோதல் குறித்தும், பின்னர் போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து முழு விளக்கத்தை விக்ரம் மிஸ்ரி அளிப்பார்.;
புதுடெல்லி,
பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 4 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டது. அதைதொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானுடனான தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வருகிற 19-ம் தேதி வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்கிறார். சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற வெளியுறவு நிலை குழுவிடம் அவர் விளக்குவார். அண்டை நாடான வங்காளதேசத்துடன் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் கனடா நாட்டுடனான உறவு உள்பட பல வெளியுறவு பிரச்சினைகள் குறித்து இந்த குழுவிடம் மிஸ்ரி வழக்கமான விளக்கம் அளித்து வருகிறார்.