மந்திரவாதியுடன் மனைவி உல்லாசம்... இடையூராக இருந்த கணவன்... அடுத்த நடந்த கோரம்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமுலு வீட்டில் நகை திருடு போனது.;
திருப்பதி,
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், ஸ்ரீபுரத்தை சேர்ந்தவர் ராமுலு (வயது 35). பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மானசி ( 35). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமுலு வீட்டில் நகை திருடு போனது. நகையை திருடியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க பெட்ட முதுநூருவை சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் (27) என்பவரிடம் கணவன், மனைவி இருவரும் சென்றனர்.
மந்திரவாதி சுரேஷ் பூஜைகள் செய்தபோது மானசாவுக்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என சுரேஷிடம் மானசா தெரிவித்தார். அதன்படி கடந்த 8-ந் தேதி மானசா உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.தனது தாய் வீட்டில் உள்ளதால் கணவரை தற்போது கொலை செய்தால் என் மீது சந்தேகம் வராது என சுரேஷிடம் தெரிவித்தார்.சுரேஷ், தனது ஊழியரான பாலபீர் மற்றும் மைத்துனர் ஹனுமந்து ஆகியோருக்கு தல ரூ. 2.80 லட்சம் கொடுத்து கொலைக்கு திட்டமிட்டார்.
சுரேஷ், ராமுலுவுக்கு போன் செய்து பெத்த முதுகுநூரூ புறநகர் பகுதிக்கு வரவழைத்தார். அவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்தனர். போதை தலைக்கேறி மயங்கிய நிலையில் இருந்த ராமுலுவின் வாய், மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சு அடைக்க செய்து கொலை செய்தனர். ராமுலு விபத்தில் இறந்ததாக சித்தரிக்க உடலில் காயங்களை ஏற்படுத்தி சாலையோரம் வீசிவிட்டு சென்றனர்.
அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவரது மனைவி மந்திரவாதியை ஏவி கொன்றது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், மானசா, பாலபீர் மற்றும் ஹனுமந்து ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.