தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாகவும், 3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.