ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-28 13:18 IST

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்!

ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023)

2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)

3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025)

4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்...

இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!

திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஒரு காணொலி காட்சி ஒன்றையும் அவர் டேக் செய்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்