மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: விசாரணைக்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எச்.ராஜாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-06-23 21:25 IST

கோப்புப்படம் 

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், மதுரை ஐகோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெறுப்புணர்வு, கலவரத்தை தூண்டும் வகையில் பேசக்கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியது, மத மோதலை தூண்டும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீசை ரத்து செய்ய முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்