தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம் வெளியீடு
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரத்தை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்
2025ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் கரூரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான
பெரியார் விருது - கழக துணைப் பொதுச்செயலாளரும் கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும்
அண்ணா விருது - தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் -பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப.சீத்தாராமன் அவர்களுக்கும்
கலைஞர் விருது - நூற்றாண்டு கண்டவரும் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் அவர்களுக்கும்
பாவேந்தர் விருது - கழக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன் அவர்களுக்கும்
பேராசிரியர் விருது - கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் -காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் ராமலிங்கம் அவர்களுக்கும்
மு.க.ஸ்டாலின் விருது - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.