திருச்செந்தூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

திருச்செந்தூர் கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது.;

Update:2025-01-31 12:30 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஜீவாநகர்- வீரபாண்டியன்பட்டினம் இடையே உள்ள ஜெ.ெஜ.நகர் கடற்கரை பகுதியில் நேற்று காலையில் சுமார் 4½ அடி நீளமுள்ள டால்பின் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. அதன் தலையில் காயம் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மீன்வளத்துறையினர், வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த டால்பினை பார்வையிட்டனர். இறந்தது சுமார் 2 வயதான ஆண் டால்பின் என்றும், அது கப்பல் அல்லது பாறையில் மோதியதில் காயம் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் டால்பினை பிரேத பரிசோதனை செய்து, கடற்கரை பகுதியில் புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்