மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,
️ #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,
️ மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி,
️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,
️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.