பாஜக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்துவேன்-நயினார் நாகேந்திரன்

தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.;

Update:2025-04-13 07:53 IST

சென்னை,

பா.ஜனதா மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், முதல் முறையாக அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓராண்டில் தேர்தல் வர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. கடுமையாக உழைத்து இந்த கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவோம். எங்கள் கூட்டணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி தோல்வி கூட்டணி என்று சொல்ல முடியும். மக்கள் ஓட்டுதான் யார் வெற்றி பெறுகிறார்கள்? யார் தோல்வி பெறுகிறார்கள்? என்பதை நிர்ணயம் செய்யும். வாக்கு எண்ணிக்கையின்போது அது தெரியும். முதல்-அமைச்சர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இதை மறைமுக கூட்டணி என்று சொல்வது தவறு.

தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும். அதை பொறுத்து மக்களின் மனநிலையும் மாறும். ஆக தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்தான் அது வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? தெரியும். கூட்டணி சேரும்போது ஒரு கருத்தும், கூட்டணியில் இல்லாதபோது ஒரு கருத்தும் இருக்கும்.இந்த காலக்கட்டத்தில் தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற கருத்தில் இணைந்துள்ளோம். பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை 4-ல் இருந்த 40 ஆக உயர்த்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இறைவனின் நாட்டம் எதுவோ?.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்