மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பஸ் நிலையம் துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.;
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் உள்ள மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பஸ் நிலையம் துணை மின்நிலையங்களில் நாளை (18.6.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் பின்வரும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை:
மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.
ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.
ராஜராஜேஸ்வரிநகர், என்.ஜி.ஓ.பி. காலனி, சேவியர் காலனி, பெருமாள்புரம், தாமஸ் தெரு, சென்மேரிஸ் தெரு, பாரதி நகர், பொதிகை நகர், டிரைவர்ஸ் காலனி ஏ காலனி 1 முதல் 6 தெரு வரை, 14வது தெரு, உதயாநகர், நியூ காலனி, டீச்சர்ஸ் காலனி, தமிழ் நகர், கிருஷ்ணா நகர், ஜெயில்சிங் நகர், திருமால்நகர், மகிழ்ச்சிநகர், அழகர்நகர், என்.ஜி.ஓ.ஏ. காலனி 7 முதல் 14வது தெரு, கனரா பேங்க் காலனி, ராமச்சந்திர நகர், ராமச்சந்திரா கார்டன், மர்பி நகர், பங்கஜநகர், நேரு நகர், சந்தோஷ் நகர், வ.உ.சி. நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.