அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் - விஜய்
தவெக தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.