கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் 14 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.;

Update:2025-08-01 07:03 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 30.6.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (வயது 38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ்(52) ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று (31.7.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்