கடத்தல் தடுப்பு குறித்து ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஐ.என்.எஸ். பருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update:2025-04-16 02:10 IST

ராமநாதபுரம்,

இலங்கை மற்றும் ராமேஸ்வரம் இடையே கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடத்தல் சம்பவங்களை தடுப்பது, கடலில் சிக்கிய மீனவர்களை மீட்பது மற்றும் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்படும் பொருட்களை மீட்பது ஆகியவை குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஐ.என்.எஸ். பருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நேற்று பாம்பன் கடல் பகுதியில் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதாகவும், மன்னார் வளைகுடா மற்றும் இந்திய கடலோர பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் இந்த பயிற்சி நடைபெறும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


Full View


Tags:    

மேலும் செய்திகள்