தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.9.2025 அன்று திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த சங்கரநைனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர் கஞ்சா விற்பனை செய்தார். இது தொடர்பான வழக்கில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.