திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் கைது

தாழையூத்து பகுதியில் நடந்த விபத்து வழக்கில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;

Update:2025-10-16 08:42 IST

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட சென்னை, கல்பாக்கத்தை சேர்ந்த முகமதுஇப்ராஹிம் (வயது 38) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 2 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன நபரை தாழையூத்து போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்