சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
திருவள்ளூர்,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்வரும் பயணிகள் ரெயில் வருகிற 27-ந்தேதி ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும், ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 5 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு சென்டிரல் செல்லும் பயணிகள் ரெயில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.25 மணிக்கு கடற்கரை செல்லும் பயணிகள் ரெயில் சூலூர்பேட்டை- எளாவூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.