சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-28 11:23 IST

கோப்புப்படம்

சென்னை,

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் மாநாட்டுக்கு பின்பு, இரண்டாவது தலைமுறை தொழில்முனைவோர் ஒருவர் எங்களுடன் பேசியபோது, "உணவு துறை தமிழ்நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளில் ஒன்றாக இருக்கிறது. அதை விரிவாக்குவதற்கு துல்லியம், முதலீடு மற்றும் ஒழுங்குத்தன்மை தேவைப்படுவதையும் இத்தகைய சவால்களை மிக சில துறைகள் மட்டுமே சந்திக்கின்றன" என்றும் கூறினார். இருந்தும், பலர் இதை “சவாலான” வணிகம் என எடுத்துக்கொள்ளவில்லை. அந்த எண்ணத்தை மாற்றவே அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்கள் அதிக முதலீடு, திறமையான மனிதவளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உலகளாவிய வளர்ச்சிக்காகத் தேவைப்படுகின்றன. உணவு துறை ஒரு உண்மையான பொருளாதார இயந்திரம் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்கின்றனர். இது நம்முடைய சொந்த தொழில்முனைவோருக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமதிப்பாகும்.

இந்த ஒப்பந்தங்கள் சிறிய சமையலறைகள் அல்லது கடைகளுக்கானவை அல்ல. தொழிற்துறை அளவிலான உணவு உற்பத்தி, குளிர்ப்பு சங்கிலிகள், ஏற்றுமதி, உலகளாவிய சில்லறை விரிவாக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளுக்கானவை.

இத்தகைய துணிச்சலான மாற்றத்தை ஏற்படுத்திவரும் முன்னோடிகளை ஆதரிக்கும் திராவிட மாடல் அரசை நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். அன்னபூர்ணா அல்லது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சை உணவகங்களாக நாம் தெரிந்திருக்கிறோம் என்பதாலேயே அவர்கள் செயல்படும் அளவும் அதுவே என்று அர்த்தமில்லை. இவை அனைத்தும் முழுமையான உணவு செயலாக்க நிறுவனங்கள். நவீன உட்கட்டமைப்புடன், சர்வதேச வழங்கல் சங்கிலிகளை உருவாக்கும் ஆக்கபூர்வமான நோக்கத்துடன் செயல்படுகின்றன.

இங்கே ஒரு கேள்வியை கேட்டுப் பாருங்கள். நம்முடைய சொந்த தொழில்முனைவோரை நாம் ஏன் கொண்டாடக்கூடாது?

ஊக்குவிப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமேதானா?. அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நிறுவனங்களை தமிழ்நாடு திறன் வளர்க்க உதவுமானால், பல தசாப்தங்களாகவே வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நம்பிக்கையை கட்டி, உள்ளூர் பொருளாதாரங்களை தாங்கி வரும் நம்முடையவர்களுக்கு ஆதரிக்கக்கூடாதா?

நமக்கு உணவு அளிப்பவர்கள், நம்மைத் தான் வேலைக்கு அமர்த்துபவர்கள், தமிழ்நாட்டின் அடையாளத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லுபவர்கள், இவ்வூர் நிறுவனங்கள்தான். அவர்கள் ஒற்றைச் சாளர வசதிக்கு தகுதியானவர்கள், அவர்கள் ஏற்றுமதி ஆதரவுக்கு தகுதியானவர்கள், அவர்கள் பெரிய கனவுகளைக் காண தகுதியானவர்கள்.

அவர்களை தாக்கி பேசுவது அவர்கள் செய்த உழைப்பை அவமதிப்பதே. அவர்களின் பின்னால் நிற்பது வலுவான தமிழ்நாட்டை உருவாக்குவதே. உங்களுடையவர்களை ஆதரியுங்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதை செய்யும். எங்கள் உணவு துறையை முழுமையாக ஆதரிக்க மேலும் முயற்சிகள் வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்