மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.2 ஆக பதிவு

மேகாலயாவில் இன்று மதியம் 3.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-04-21 23:25 IST

ஷில்லாங்,

மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.57 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்