திறந்தவெளி வாகனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-16 02:57 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு உட்பட்ட தெருக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார். முன்னதாக மக்களை சந்தித்து துண்டு பிரசாரம் அளித்து வாக்கு சேகரித்தார்.

திறந்த வாகனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து சென்னை ஐ.சி.எப். பகுதியில் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

காஞ்சீபுரம் தி.மு.க. வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து இன்று மாலையில் பிரசாரம் செய்கிறார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்