ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று; பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.;

Update:2025-09-21 19:38 IST

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்