பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி. அணியை ஊதித்தள்ளிய இந்தியா
இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.;
image courtesy:twitter/@blind_cricket
புதுடெல்லி,
பார்வையற்றவர்களுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கேப்டன் தீபிகா 91 ரன்களும், புலா சரன் 54 ரன்களும் விளாசினர். ‘
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவை, இந்திய அணியினர் 19.3 ஓவர்களில் 57 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 235 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது. இது இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.