சாம்பியன்ஸ் டிராபியில் முதல் முறை.. வரலாறு படைத்த நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆட்டம்

சாம்பியன்ஸ் டிராபியின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.;

Update:2025-03-06 06:51 IST

image courtesy:twitter/@ICC

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், வில்லியம்சன் 102 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்டெ்டுக்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 100 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னெர் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தரப்பில் 2 சதங்கள் (ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன்), தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஒரு சதம் (டேவிட் மில்லர்) என மொத்தம் 3 சதம் அடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு போட்டியில் 3 சதங்கள் அடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாபெரும் சாதனை நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் பதிவாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்