பிசிசிஐ தலைவராகிறார் சச்சின்?

துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்;

Update:2025-09-05 08:43 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார் .

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் 70 வயது பூர்த்தியடைந்தது. பிசிசிஐ விதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

தொடர்ந்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியா உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்