டி.என்.பி.எல்.: சோனு யாதவ் ஹாட்ரிக்.. திருச்சி அணி 157 ரன்கள் சேர்ப்பு
திருச்சி தரப்பில் அதிகபட்சமாக வாசீம் அகமது 41 ரன்கள் அடித்தார்.;
image courtesy:twitter/@TNPremierLeague
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் .
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுஜய் 12 ரன்களிலும், ஜெயராமன் 9 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கைகோர்த்த வாசீம் அகமது - ஜாபர் ஜமால் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இவர்களில் வாசீம் அகமது 41 ரன்களிலும், ஜாபர் ஜமால் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் ராஜ்குமார் அதிரடியாக விளையாடி (30 ரன்கள்) அணி வலுவான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது. நெல்லை தரப்பில் கடைசி ஓவரை வீசிய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை களமிறங்க உள்ளது.