மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-02-24 19:08 IST

image courtesy: @wplt20

பெங்களூரு,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.

இந்த தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. அதில் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. உ.பி.வாரியர்ஸ் 4-வது இடத்திலும், குஜராத் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்