மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.;
கவுகாத்தி,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வரும் 8வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேசம் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வங்காளதேசம் 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.