இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.