ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு
வெளிப்பாளையம்:
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயம் இல்லை என அறிவித்து தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாகை அவுரி திடலில் கடந்த 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்டச்செயலாளர் பூபேஷ் குப்தா உள்ளிட்ட 30 பேர் மீது வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





