இளையோர் கிரிக்கெட்: வைபவ் , ஆரோன் அபார சதம்....இந்தியா 393 ரன்கள் குவிப்பு

வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்கள், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்கள் எடுத்தனர்.
பெனோனி,
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. வைபவ் சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதமடித்தனர்.இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்கள், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்கள் எடுத்தனர்.
Related Tags :
Next Story






