'எதற்கும் துணிந்தவன் ' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு


எதற்கும் துணிந்தவன்  திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
x
தினத்தந்தி 16 Dec 2021 4:15 AM GMT (Updated: 16 Dec 2021 4:15 AM GMT)

எதற்கும் துணிந்தவன் படத்தின் 'வாடா தம்பி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது

சென்னை,

இயக்குனர்  பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும்  திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக  பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம்  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வெளியாகிறது.இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் 'வாடா தம்பி' என்ற  முதல் பாடல் வெளியாகியுள்ளது , இமான்  இசையில் 
இந்த பாடலை அனிருத்,ஜிவி பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்,.

Next Story