பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக புகார்.. நடிகர் ராதாரவி மீது வழக்குப் பதிவு..!


பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக புகார்.. நடிகர் ராதாரவி மீது வழக்குப் பதிவு..!
x

இது தொடர்பான புகாரின் பேரில், நடிகர் ராதாரவி மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக, நடிகர் ராதாரவி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், நடிகர் ராதாரவி, இயக்குநர் கதிரவன் பாலு உள்பட எட்டு பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




Next Story