'கங்குவா' படத்தின் காட்சிகளை மகனுடன் பார்த்து ரசித்த நடிகர் பாபி தியோல்


கங்குவா படத்தின் காட்சிகளை மகனுடன் பார்த்து ரசித்த நடிகர் பாபி தியோல்
x

சமீபத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சமீபத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில் 'கங்குவா' படத்தின் சில காட்சிகளை நடிகர் பாபி தியோல் அவரது மகனுடன் இணைந்து பார்த்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. ஸ்டுடியோவுக்கு வந்த அவர்களை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். படக்காட்சிகளை நடிகர் பாபிதியோல் மற்றும் அவரது மகன் இருவரும் பார்த்து மிகவும் ரசித்தனர்.



Next Story