இவர் இசையில் பாடுவது எப்போதும் மகிழ்ச்சி - யுவன் சங்கர் ராஜா டுவீட்..!


இவர் இசையில் பாடுவது எப்போதும் மகிழ்ச்சி - யுவன் சங்கர் ராஜா டுவீட்..!
x

'இறுகப்பற்று' படத்தின் 'பிரியாதிரு' என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் முதல் பாடலான 'பிரியாதிரு' பாடல் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடியது குறித்து யுவன் சங்கர் ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடுவது எப்போதும் மகிழ்ச்சி. பிரியாதிரு பாடலை பாடியதில் மகிழ்ந்தேன்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story