அந்த தருணத்தில் மொத்த தியேட்டரும் எழுந்து நின்னுச்சு...! டான் படம் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி


அந்த தருணத்தில் மொத்த தியேட்டரும் எழுந்து நின்னுச்சு...! டான் படம் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
x

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது, இந்த படம் முதற்பாதியில் ஹிட் என்றால், படமே ஹிட் தான் என நினைத்தோம். இதற்காக படத்தின் முதல் பாதியை நான் மூன்று திரையரங்கில் கண்டு ரசித்தேன். மொத்த படமும், மற்றும் படத்தின் இறுதி காட்சிகளும் நன்றாக இருந்ததாக தெரிவித்தனர்.

ஆனால், இரவு உதயநிதி சாரிடம் இருந்து வந்த போன் அழைப்பு எனக்கு ஸ்பெஷலாக இருந்தது. அவர் என்னிடம், படம் நன்றாக உள்ளது. ஆனால் நீண்ட நேரம் ஓடிக்கொண்டு ஏதாவது மிஸ் ஆயிரக்கூடாது. நான் சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் கண்டு ரசித்தேன். அதில் எஸ்.ஜே.சூர்யா சார், ஸ்வேதா மிஸ் படத்தை வைக்கும்போது மொத்த தியேட்டரும் எழுந்து நின்றனர். படத்திற்கு வரவேற்பு வேற மாதிரி உள்ளது என்று அவர் என்னிடம் கூறினார். மேலும், இந்த படம் நிச்சயம் டாக்டரையும் தாண்டும் என்று கூறினார். அப்போது தான் இந்த படத்தின் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தை என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அவர் கூறியபடியே படம் வெற்றிபெற்றுவிட்டது. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். மேலும், படத்திற்காக உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Next Story