எனது பணத்தில் கார், பங்களா... மற்றொரு நபருடன் வாழ்க்கை; பிரபல நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு


எனது பணத்தில் கார், பங்களா... மற்றொரு நபருடன் வாழ்க்கை; பிரபல நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jun 2022 5:54 AM GMT (Updated: 13 Jun 2022 6:10 AM GMT)

எனது பணத்தில் கார், பங்களா எல்லாம் வாங்கி கொண்டு மற்றொரு நபரை வீட்டில் வைத்து வாழ்கிறார் என பிரபல நடிகை ராக்கி சவந்த் மீது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புனே,

இந்தி திரை துறையில் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சவந்த். இவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங். தனது சமூக கணக்குகளை முடக்கி விட்டார் என கூறி ரித்தேஷ் மீது போலீசில் நேற்று புகார் கூறினார். இதற்காக அவர் தனது காதலரான அடில் கானுடன் புகார் அளிக்க சென்றார்.

அவர் திரும்பி வரும்போது, எனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெயில் கணக்கை கூட முடக்கம் செய்து விட்டார் என ரித்தேஷ் மீது குற்றச்சாட்டாக செய்தியாளர்களிடம் கூறிய அவர் பேசும்போது மனம் உடைந்து அழுது விட்டார்.

ராக்கி சவந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் இருவரும் பிக் பாஸ் சீசன் 15ல் ஒன்றாக பங்கேற்றனர். வைல்ட் கார்டு வழியே உள்ளே நுழைந்த ரித்தேஷ், ஒரு சில வாரங்கள் தங்கி விட்டு பின்னர் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்பின்பு இருவரும் மனம் ஒத்து போகாமல் பிரிந்தனர். இதனை கடந்த பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தில் ராக்கி சவந்த் உறுதிப்படுத்தினார். முதல் திருமணம் நடந்து, மனைவியிடம் விவாகரத்து பெறாமல், அதனை மறைத்து தன்னை காதலித்து உள்ளார் என்று ராக்கி குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ராக்கி சவந்தின் சமூக ஊடக புகார் பற்றி பேசிய முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ முறையில் பதிலளிப்பேன். நிலைமை வெளிப்படையாக தெரிகிறது. கோடிக்கணக்கில் அவருக்காக பணம் வாரி இறைத்திருக்கிறேன்.

அதனை பெற்று கொள்ளும்போது, அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் செலவு செய்வது நின்றவுடன், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார். இன்ஸ்டாகிராம் பதிவால் உறவு முடிந்து போனதுபற்றி இதற்கு முன் நீங்கள் கேள்விபட்டு உள்ளீர்களா? என அவர் கேட்டுள்ளார்.

வருங்காலத்தில், அவதூறு ஏற்படுத்த என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை கூட அவர் கூறுவார். அவரும், அடிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பினோம் என்று கூட சொல்வார். அவரால் இந்த நாடகம் போட மட்டுமே முடியும். அவரை விட்டு விலகி விட்டேன். வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

3 ஆண்டுகளாக அவர் என்னை பயன்படுத்தி வந்துள்ளார். அவரிடம் ஒரு கார் கூட கிடையாது. வீட்டில் எந்த பொருட்களும் கிடையாது. அவரது வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் எனது பணத்தில் வாங்கியவை.

நான் வாங்கி வைத்த பொருட்களை பயன்படுத்தி கொண்டு, வெட்கமேயில்லாமல் வீட்டில் சட்டவிரோத வகையில் மற்றொரு நபரை அவர் வைத்திருக்கிறார் என நடிகை ராக்கி சவந்த் மீது அவரது முன்னாள் கணவரான ரித்தேஷ் சிங் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story