'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 'தாதா சாகேப் பால்கே விருது' அறிவிப்பு


காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
x

நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வெளியான கன்னட திரைப்படம் 'காந்தாரா' 400 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்தது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 20-ந்தேதி மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story