அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும் 'கிரிமினல்' படக்குழு


அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும் கிரிமினல் படக்குழு
x

கவுதம் கார்த்திக் தற்போது 'கிரிமினல்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

அறிமுக இயக்குனர் தட்சிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் திரில்லர் வகை கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ம் தேதி மதுரையில் தொடங்கியது. இந்த நிலையில், இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதனை கவுதம் கார்த்திக் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் 'கிரிமினல்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Next Story