'கோட்' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்


கோட் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்
x

‘கோட்’ படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்ற தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.

யுவன் இசையில் விஜய் பாடிய விசில் போடு பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா 'கோட்' படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story